மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பரிசுப் போட்டி.

 



சற்று முன்னர், ‘மலேசியத் தமிழ் சங்கத்தின் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025’ என்ற தலைப்பில் பதிவொன்றைப் படிக்க நேர்ந்தது.
அப்பதிவில், கீழ்க்காணும் படியாக ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது.
“நூல்களை வெளியிடும் எழுத்தாளர்களை ஊக்கப்படும் நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கு பெற்று பயனடையுமாறு..”
பதிவை வெளியிட்டது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். முகநூல் போன்ற பொதுவெளியில் பதிவிடுவதற்கு முன்னர் ஒரு மீள் வாசிப்பைச் செய்திருக்க வேண்டாமோ?.
எனது கவலையெல்லாம் எங்கே, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!.’ என்ற நினைப்பிலிருக்கும் பேர்வழி யாராவது கடந்த வருடங்களில் ‘நாண் ஒறு கொழை செய்தேண்’ என்ற தலைப்பில் ஏதாவது நாவலைப் பதிப்பித்திருக்கப் போக, அதைப் போட்டிக்கு அனுப்பி வைத்துவிடப் போகிறாரோ என்பதுதான்.
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!..
வெறும் மேடை முழக்கமாகிவிடலாமா என்ன?..

Comments

Popular Posts