Skip to main content

Posts

Featured

  சிறுகதை 10 A+   CLICK HERE TO READ                                                                       1 ல ட்சுமி, கொம்பிலிருந்து உருவிப் போட்ட கொடியைப் போல் சவப்பெட்டியின் மேல் சரிந்து கிடந்தாள். கண்கள், கணவனையே வெறித்திருந்தன. ஆர்ப்பாட்டத்துடன் அழுதுத் தீர்க்க வேண்டிய அழுகையை முற்றாக அழுதுத் தீர்த்துவிட்டவள் போல் தளர்ந்து, துவண்டுக் காணப்பட்டாள். உதடுகள், ‘ஏன் இப்படி செஞ்சீங்க?. நீங்க இல்லாம நா எப்படி இருப்பன்?..’ என்று கணவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் பிராது கொடுத்துக் கொண்டிருந்தாள் போல!. உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வலது கை, நெஞ்சக் கூட்டில் கிடந்தது. ‘மனச தொட்டு சொல்லுங்க. நீங்க செஞ்சது நாயமா?.’ -நீதி கேட்டாளோ!. அவ்வப்போது கன்னங்களில் வழிந்தோடிய நினைவுகளின் ஈரத்தில் கலந்திருந்த துயரம் ருசித்ததோ என்னவோ, எவ்வளவு விரட்டியும் போகாமல் ஈக்கள், மீண்டும் மீண்டும் பறந்து வந்து கண்ணீரில் ...

Latest posts